loader image

Author:

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிரோடு எரிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றிய நாள்”

Your email address will not be published. Required fields are marked *

உயிரோடு எரிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றிய நாள்

(04.12.2025) இந்தநாள் வரலாற்றில் சிறப்புமிக்க நாள்.. இந்தியாவில் காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்விலிருந்து, பெண்களை காப்பாற்றிய நாள்..

அந்த கொடூரமான நிகழ்வைப்பற்றி “டொனால்ட் கேம்ப் பெல்,(Donald Campbell) என்ற ஐரோப்பியர் 1798ம் ஆண்டு தனது குறிப்பில் பதிவு செய்துவைத்துள்ளார்..

“கணவன் இறந்தால் அவர் மனைவி கணவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற்றல் நேரில் பார்த்து, அவர் குறிப்பிட்டுள்ளார்.. அங்கு நடந்த நிகழ்வுகளைப்பற்றிய.. அவரின் குறிப்பு…

“உடன்கட்டை ஏற்றும் நிகழ்வை பார்க்க நான் சென்றிருந்தேன்.. இந்த வேதனை தரும் கொடிய சம்பவம் நிகழ்ந்த இடம், தஞ்சாவூர் கோட்டையில் இருந்து ஒரு மையில்தூரம் வடக்கே உள்ள காவிரி ஆற்றின்கரை..

அந்த அப்பாவி பெண்ணிற்கு 16 வயதுதான் இருக்கும், வெள்ளை சேலை கட்டி இருந்தாள், தலையிலும் கழுத்தை சுற்றிலும், வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தால், அந்தப்பெண்ணைச்சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒருவெள்ளை துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அங்கிருந்து ஒரு 20 அடி தள்ளி சிலர், விறகு கட்டைகளால் எட்டடி நீளத்திலும், நான்கடி அகலத்திலும், விறகுகட்டைகளால் சிதை தயாரித்து கொண்டு இருந்தார்கள்.

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள்.
உள்ளே சிறிய சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள். அருகில் வைக்கப்பட்டிருக்கும், இறந்தவருக்கு 60 வயதிற்கு மேல் இருக்கும்.. இறந்தவரின் உடலுக்கு சில பிராமணர்கள் சடங்குகள் செய்து கொண்டிருந்தார்கள். சில மந்திரங்களையும் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைத்து இருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு வயதானவர் ஓலைச்சுவடியை பார்த்து ஏதோ வாசித்துக் கொண்டும் இருந்தார். என்னைப்போல் இந்த சம்பவத்தை நேரில் பார்க்க பலர் நின்று கொண்டிருந்தார்கள்.. நான் அருகில் இருந்தவரிடம் கேட்டேன் “சடங்கு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் “என்று. அதற்கு அவரோ “இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும்” என்றார்.

உயிரோடு எரிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றிய நாள்

(04.12.2025) இந்தநாள் வரலாற்றில் சிறப்புமிக்க நாள்.. இந்தியாவில் காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்விலிருந்து, பெண்களை காப்பாற்றிய நாள்..

அந்த கொடூரமான நிகழ்வைப்பற்றி “டொனால்ட் கேம்ப் பெல்,(Donald Campbell) என்ற ஐரோப்பியர் 1798ம் ஆண்டு தனது குறிப்பில் பதிவு செய்துவைத்துள்ளார்..

“கணவன் இறந்தால் அவர் மனைவி கணவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற்றல் நேரில் பார்த்து, அவர் குறிப்பிட்டுள்ளார்.. அங்கு நடந்த நிகழ்வுகளைப்பற்றிய.. அவரின் குறிப்பு…

“உடன்கட்டை ஏற்றும் நிகழ்வை பார்க்க நான் சென்றிருந்தேன்.. இந்த வேதனை தரும் கொடிய சம்பவம் நிகழ்ந்த இடம், தஞ்சாவூர் கோட்டையில் இருந்து ஒரு மையில்தூரம் வடக்கே உள்ள காவிரி ஆற்றின்கரை..

அந்த அப்பாவி பெண்ணிற்கு 16 வயதுதான் இருக்கும், வெள்ளை சேலை கட்டி இருந்தாள், தலையிலும் கழுத்தை சுற்றிலும், வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தால், அந்தப்பெண்ணைச்சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒருவெள்ளை துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அங்கிருந்து ஒரு 20 அடி தள்ளி சிலர், விறகு கட்டைகளால் எட்டடி நீளத்திலும், நான்கடி அகலத்திலும், விறகுகட்டைகளால் சிதை தயாரித்து கொண்டு இருந்தார்கள்.

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள்.
உள்ளே சிறிய சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள். அருகில் வைக்கப்பட்டிருக்கும், இறந்தவருக்கு 60 வயதிற்கு மேல் இருக்கும்.. இறந்தவரின் உடலுக்கு சில பிராமணர்கள் சடங்குகள் செய்து கொண்டிருந்தார்கள். சில மந்திரங்களையும் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைத்து இருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு வயதானவர் ஓலைச்சுவடியை பார்த்து ஏதோ வாசித்துக் கொண்டும் இருந்தார். என்னைப்போல் இந்த சம்பவத்தை நேரில் பார்க்க பலர் நின்று கொண்டிருந்தார்கள்.. நான் அருகில் இருந்தவரிடம் கேட்டேன் “சடங்கு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் “என்று. அதற்கு அவரோ “இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும்” என்றார்.

Author:

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிரோடு எரிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றிய நாள்”

Your email address will not be published. Required fields are marked *