படைப்பாளர் வட்டம்
எழுத்தாளர் வரவேற்பு
நீங்கள் சிறந்த கற்பனைக் கவிஞராக, சிறுகதை , நாவல் எழுத்தாளராக, கட்டுரையாளராக, இலக்கிய வாசகர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்து இன்னும் பல பிரிவு சார்ந்த படைப்புகளை உருவாக்கி தங்களின் உள்ளார்ந்த அனுபத் திறமைகளை வெளிப்படுத்தி சிந்தனைக்கும் பேனாஎழுத்துக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும் முறையான படைப்புகளை சமர்ப்பிக்க தமிழால் தமிழை வளர்க்கும் நோக்கில் உங்களை நோக்கி இயங்க முன்வந்துள்ளது அகரமுதலி தமிழ் இணையதளம்.
எனவே நீங்கள் எங்களோடு இணைந்து மொழி வளத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் இணைந்து செயல்பட உங்கள் திறமையை உலகிற்கு பறை சாற்ற அறிய சந்தர்ப்பம்
நீங்கள் எம்மை நோக்கி உங்கள் படைப்புகளான (கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், பிற படைப்புகள், ஓவியங்கள், தமிழ் மொழி வளர்ச்சி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த உங்களின் தனித்துவமான ஆக்கங்களை எம்முடன் இணைந்து அகரமுதலி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
- இத்தளத்தில் ஆரம்ப படைப்பாளர்கள் தம்மை அறிமுகம் செய்துகொள்ள முடியும்.
- மாணவர்களுக்கான படைப்புகள் மற்றும் கல்வி சார்ந்த தகவல்களை அறிய இயலும்.
- தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி மற்றும் அறிவியல் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
இத்தளமானது எமது மொழி மற்றும் இலக்கிய இலக்கண வளர்ச்சி குறித்து விரிவாக விளக்க உதவுவதோடு மட்டும் அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு தேவையான தகவல்களை கொண்டு சேர்க்கும் நோக்கில்
எம் அகரமுதலி இணையதளத்துடன் கைகோர்த்து பயணிக்க இன்றே எம்மோடு இணையுங்கள் !
படைப்பாளர்களுக்கான அழைப்பு
திறமையை கௌரவிக்கும் அகரமுதலி
“தாய்மொழி தமிழுக்கான சேவையாய்” ஆரம்பிக்கப்பட்ட அகரமுதலி வலைத்தளமானது காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்களின் பெட்டகமாக மட்டுமல்லாது, படைப்பாற்றல் துறையில் சிகரம் தொட எத்தனிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் ஒரு தளமாக அமைகின்றது என்றால் மிகையாகாது.
அதோடு சேர்த்து படைப்பாளர்களின் சொந்தப் படைப்புகளான கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற பல்சுவை படைப்புகளுக்கான சங்கமமாகத் திகழும் எமது அகரமுதலி வலைத்தளத்தில், உங்களது வயது, அனுபவம், தகைமை போன்ற எவ்வித பாரபட்சமுமின்றித் திறமையான படைப்புகளை வரவேற்கின்றோம்.
ஆண்டு தோரும் படைப்பாளர்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அவற்றில் தரமான படைப்புகளுக்கான எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்களது ஆக்கங்களை எங்கள் வலைத்தளத்தில் இலவசமாக பதிவேற்றுங்கள். அகரமுதலி வலைத்தளத்தினால் ஆண்டுதோறும் பதிவேற்றப்பட்ட உங்களது ஆக்கங்கள் தேர்ச்சி பெற்ற நடுவர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு கலைஞர்களுக்கான விருதுகள் பரிந்துரைக்கப்படும்.
எமது வலைத்தளத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளாக
- அதிகப்படியான ஆக்கங்களை முன்வைத்த கலைஞருக்கான "அகரமுதலி சாதனையாளர்" விருது
- எழுச்சிமிகு ஆக்கங்களை முன்வைத்த கலைஞருக்கான "அகரமுதலி படைப்புச் செம்மல்" விருது
- நேயர்களை அதிகம் கவர்ந்த மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஆக்கங்களை முன்வைத்த கலைஞர்களுக்கான "அகரமுதலி வித்தகர்" விருது
- புதிய வரவுக்கான "அகரமுதலி கலைக்கூடலின் சிற்பி" விருது
போன்ற விருதுகள் எமது கலைஞர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படுகின்றன.
எங்கள் படைப்பாளர்கள்
எங்கள் தளத்தில் இடம்பெறும் படைப்பாளர்கள்