இந்திய வம்சாவளிகள் இன்று தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறனர். ஆனால் அவர்கள் இருப்பில்லாதவர்கள் இல்லை. வளர்ந்து வந்த அரசியல் சமூக காரணங்கள் இருப்பை கேள்விக் கள்ளாக்கியது என்பதை மறுக்கமுடியாது. வரலாறும் உள்ளது.தமது வாழ்வியலை அவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளனர்.மலையக தமிழர்கள் எல்லா துறைகளிலும் சாதித்துள்ளார்கள். சினிமாதுறையிலும் அவர்கள் சாதிக்க தவறவில்லை. இலங்கயின் முதலாவது நடிகை என்று போற்றப்படுபவர் ருக்மணி தேவி. அவர் மலையகத்தை சேர்தஞந்தவர் என்பது பலருக்கு தெரியாது. தேசிராஜாம்பாள் என்ற மலையக கிறிஸ்தவ பெண் தான் கொழும்புக்கு இடம் பெயர்ந்து ருக்மணிதேவி என்ற பெயரில் புகழின் உச்சத்தை தொடுகின்றாள்.இவ்வாறு மலையக தமிழர்கள் தமது வாழ்வியலுடன் கலந்த கலையை வெளிப்படுத்தியுள்ளார்கள் ஆனால் அவை பேசப்படுவது இல்லை.கடந்தவாரம் நடந்த சர்வதேச மலையக திரைப்பட விழாமலையிலிருந்து ஊற்றெடுக்கும் நதிபோல மலையகத்திலிருந்த உருவான இலங்கை திரைப்படவளர்ச்சியை அறியமுடிந்தது.சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமார் இலங்கை சினிமாவில் மலையக தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மலையக சினிமாவை படம்போட்டுகாட்டினார்.மலையகத்தில் இதுவரை 50 திரைப்படங்கள் இருவாகியிருக்கின்றன. அந்தவரிசையில் இலஙயைின் முதலாவது திரைப்படமாக சமுதாயம் என்ற திரைப்படம்உருவானது. ஆனால் அது திரையிடப்படாமல் போனது கவலைக்குரிய விடயம். 1963ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1963ஆம் ஆண்டு தோட்டக்காரன் என்றதிரைப்படத்தை திரையிட்டார்.அதை ஆண்டு மண்சரிந்து பல உயர்களைகாவுகொண்ட கொஸ்லாந்தையில் இருந்த அருண என்பவர் புரட்சி என்ற திரைப்படத்தை வெளியிட்டார்.1969 ஆம் ஆண்டு எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த எம்.டி பாலன் என்பவரால்மஞ்சல் குங்குமம் என்ற திரைப்படம் வெளியானது.
இந்திய வம்சாவளிகள் இன்று தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறனர். ஆனால் அவர்கள் இருப்பில்லாதவர்கள் இல்லை. வளர்ந்து வந்த அரசியல் சமூக காரணங்கள் இருப்பை கேள்விக் கள்ளாக்கியது என்பதை மறுக்கமுடியாது. வரலாறும் உள்ளது.தமது வாழ்வியலை அவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளனர்.மலையக தமிழர்கள் எல்லா துறைகளிலும் சாதித்துள்ளார்கள். சினிமாதுறையிலும் அவர்கள் சாதிக்க தவறவில்லை. இலங்கயின் முதலாவது நடிகை என்று போற்றப்படுபவர் ருக்மணி தேவி. அவர் மலையகத்தை சேர்தஞந்தவர் என்பது பலருக்கு தெரியாது. தேசிராஜாம்பாள் என்ற மலையக கிறிஸ்தவ பெண் தான் கொழும்புக்கு இடம் பெயர்ந்து ருக்மணிதேவி என்ற பெயரில் புகழின் உச்சத்தை தொடுகின்றாள்.இவ்வாறு மலையக தமிழர்கள் தமது வாழ்வியலுடன் கலந்த கலையை வெளிப்படுத்தியுள்ளார்கள் ஆனால் அவை பேசப்படுவது இல்லை.கடந்தவாரம் நடந்த சர்வதேச மலையக திரைப்பட விழாமலையிலிருந்து ஊற்றெடுக்கும் நதிபோல மலையகத்திலிருந்த உருவான இலங்கை திரைப்படவளர்ச்சியை அறியமுடிந்தது.சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமார் இலங்கை சினிமாவில் மலையக தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மலையக சினிமாவை படம்போட்டுகாட்டினார்.மலையகத்தில் இதுவரை 50 திரைப்படங்கள் இருவாகியிருக்கின்றன. அந்தவரிசையில் இலஙயைின் முதலாவது திரைப்படமாக சமுதாயம் என்ற திரைப்படம்உருவானது. ஆனால் அது திரையிடப்படாமல் போனது கவலைக்குரிய விடயம். 1963ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1963ஆம் ஆண்டு தோட்டக்காரன் என்றதிரைப்படத்தை திரையிட்டார்.அதை ஆண்டு மண்சரிந்து பல உயர்களைகாவுகொண்ட கொஸ்லாந்தையில் இருந்த அருண என்பவர் புரட்சி என்ற திரைப்படத்தை வெளியிட்டார்.1969 ஆம் ஆண்டு எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த எம்.டி பாலன் என்பவரால்மஞ்சல் குங்குமம் என்ற திரைப்படம் வெளியானது.
There are no reviews yet.
Reviews
There are no reviews yet.